இறையாகவே நிற்கும் காலம் இது தானோ?

 

 

இறையாகிய உணர்வைத் தந்து

இயல்பாகிய உணர்வும் கொண்டு

முறையாகவே சமயம் காத்த         – முதல்வேந்தர்

பிறைசூடிய முதலும் நீலப்;

பிளம்பாகிய இறையும் தன்னில்

நிறைந்தோங்கிட வாழ்ந்த எங்கள்      – இறைபாபா

 

சிறைபோலுயர் துயரம் நீக்கி

சிறகாகவே இருந்தும் காத்து

குறையாமலே அருளும் செய்த        – தவயோகி

 

துறையானதொரு கல்விக் காக

துணையாகவே மருந்துக் காக

அறையாலுயர் மாடம் கண்ட        – மறையோனை

 

கறையாலுயர் கண்டம் மற்றும்

கரமேந்திய சூலம் கொண்ட

பொறையாலுயர் தெய்வம் வந்து       – அழைப்பானோ

 

திறையாகவே தம்மை ஈய்ந்து

திரளாகவே கூடி ஏங்கி

உறையாகவே நிக்கும் எம்மை        – அறிவானோ

 

பறையாமலே மௌனம் காக்கும்

பதமேயெமை விடுத்து பாபா

இறையாகவே நிற்கும் காலம்         – இதுதானோ?

 

 

 

 

 

 

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.