இரா.சம்பந்தன் கவிதைகள் 2


மலரே நீ அழகாக இருக்கிறாய்!
நான் ஆசைப்பட்தில்லை
மலரே நீ தேனோடு இருக்கிறாய்
நான் திரும்பிப் பார்த்ததில்லை
மலரே நீ இதழோடு இருக்கிறாய்
நான் முத்தமிட்டதில்லை
மலரே நீ வாடிவிடுகிறாய்
நான் வருந்தியதில்லை
மலரே நான் துறவியல்ல
மயங்காமல் இருப்பதற்கு!
ஆனால்
மலரே நீ பூத்திருப்பது கொடியில்!
தாலிக்
கொடி பூத்திருப்பது என் மலரில்!
தேன் சேர்த்திருக்கிறாய் உடலில்
என்மலர் சேர்த்திருப்பதோ இதழில்!
ஏனாசைப் வேண்டும் உனையும்?
என்மலரைக் கலங்கவிட்டு இனியும்?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.