இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!

நெஞ்சகமும் மண்நிலமும்

பிஞ்சுகனி பூவினமும்

நின்றெரியும் கண்விளக்கும் – சிவப்பான

வஞ்சமற்ற மானுடர்கள்

இன்பமுற்று வாழுகின்ற

வரமுடைய இணுவிலெனும் – நிலமீதில்

அஞ்சுவிரல் இரண்டுகரத்

தண்டெடுத்து ஒன்றிணைத்து

ஐந்துகரக் கன்றுதனின் – அடிபோற்றி

பஞ்சுமுகில் நின்றுலவிக்

கொஞ்சுமொரு மலைமகளைக்

பங்குகொண்ட வெண்விடையார் – நினைவோடு

நெஞ்சமலர் அன்பொழுக

நெடியவழி பறந்துவந்து

நின்றஅருள் திவாகரனார் – உருவாக்கி

தஞ்சமென்று சென்றுநின்று

தாள்பணிந்து துன்பமற

தந்தபெரும் சீரடியார் – திருக்கோவில்

குஞ்சுவிளம் முதுமையென்ற

குணங்கடந்து அங்குசென்று

கும்பிடுவார் என்றுமிங்கே – மிகவாழ்வார்

இஞ்சிமஞ்சள் நெய்கலந்து

இனிதுபொங்கி அமுதளிப்பார்

இறையவனார் பாபாவின் – நிழல்மீதில்

எஞ்சிநின்ற வினைகடந்து

என்றுமுயர் நிலையடைந்து

இன்பநிலை பெற்றிடுவார் – புவிமீதே!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.