இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!
நெஞ்சகமும் மண்நிலமும்
பிஞ்சுகனி பூவினமும்
நின்றெரியும் கண்விளக்கும் – சிவப்பான
இன்பமுற்று வாழுகின்ற
வரமுடைய இணுவிலெனும் – நிலமீதில்
அஞ்சுவிரல் இரண்டுகரத்
தண்டெடுத்து ஒன்றிணைத்து
ஐந்துகரக் கன்றுதனின் – அடிபோற்றி
பஞ்சுமுகில் நின்றுலவிக்
கொஞ்சுமொரு மலைமகளைக்
பங்குகொண்ட வெண்விடையார் – நினைவோடு
நெஞ்சமலர் அன்பொழுக
நெடியவழி பறந்துவந்து
நின்றஅருள் திவாகரனார் – உருவாக்கி
தஞ்சமென்று சென்றுநின்று
தாள்பணிந்து துன்பமற
தந்தபெரும் சீரடியார் – திருக்கோவில்
குஞ்சுவிளம் முதுமையென்ற
குணங்கடந்து அங்குசென்று
கும்பிடுவார் என்றுமிங்கே – மிகவாழ்வார்
இஞ்சிமஞ்சள் நெய்கலந்து
இனிதுபொங்கி அமுதளிப்பார்
இறையவனார் பாபாவின் – நிழல்மீதில்
எஞ்சிநின்ற வினைகடந்து
என்றுமுயர் நிலையடைந்து
இன்பநிலை பெற்றிடுவார் – புவிமீதே!