ஆயுத ஊழலும் மாணிக்கவாசகரும்!
பழைய காலத்தில் யுத்த தளபாடங்களில் குதிரை முதலிடத்தை வகித்தது. அதனால் பாண்டிய மன்னன் தனக்கு மந்தியாக இருந்த மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து குதிரைகள் வாங்கச் சொன்னான். அது மக்களின் வரிப்பணம். அவர் அந்தப் பணத்தை குதிரைகள் வாங்காமல் தான் சார்ந்திருந்த சைவ மடத்து உறுப்பினர்களுக்கு கொடுத்து விட்டார் மணிவாசகர். அதனால் மன்னன் அவரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தி மக்கள் வரிப்பணத்தை திரும்பவும் வாங்க முயற்சி செய்தான். எனவே ஆயுத ஊழலைத் தொடக்கி வைத்து முதலில் சிறை சென்ற மந்திரியாக மாணிக்கவாசகர் வரலாற்றில் தென்படுகின்றார்.
இரா.சம்பந்தன்
