ஆந்தையும்-குயிலும்!
அந்த ஆந்தை தான் வழமையாகப் பறக்கும் திசையை விட்டு வேறு திசையில் கவலையோடு பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட குயில் நண்பனே ஏன் இன்று திசையை மாற்றிப் பறக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு ஆந்தை இங்கு உள்ளவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால் வேறு இடம் தேடிப் பறக்கின்றேன் என்று சொன்னது. உடனே குயில் நண்பனே! நீ திசையை மாற்றிப் பயனில்லை! உன் குரலை மாற்று. இல்லாவிட்டால் நீ போகும் புது இடத்திலும் உன்னை வெறுப்பார்கள் என்று சொன்னது!