அவனும் அவளும் திருக்குறளும்!
அவள் – உங்களுக்கு நிலவு பிடிக்குமா?
அவன் – இல்லைப் பிடிக்காது.
அவள் – ஏன்?
அவன் – பிடிக்காது என்றால் விடு
அவள் – நிலவு எவ்வளவு அழகானது. எல்லோருக்கும் பிடிக்கும்.
அவன் –
உனது முகத்தின் அழகை எனக்கு மட்டும் நீ காட்டுவது போல நடந்து கொள்ளாமல் நிலவு தன் முகத்தை எல்லோருக்கும் காட்டிக்கொள்வதால் நிலவை எனக்குப் பிடிக்காது. நிலவின் ஒழுக்கம் சரியில்லை.
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர்காணத் தோன்றல் மதி
(திருக்குறள் நலம் புனைந்து உரைத்தல் குறள் 1119)
நிலவே என்னுடைய காதலியின் முகத்தோடு உன்னை ஒப்பிட்டு நான் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் உனக்கு இருந்தால் எல்லோருக்கும் உன் முகத்தைக் காட்டுகின்ற பழக்கத்தை முதலில் கைவிடு.
இரா.சம்பந்தன்