அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்
திருக்குறள் – பிறனில் விழையாமை!
அடுத்தவர்கள் மனைவியை அபகரிக்கும் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் தோன்றிய வள்ளுவர் அதனை எதிர்த்து பிறன் இல் விழையாமை என்று ஒரு அதிகாரம் எழுதினார். பிறருடைய மனைவி மீது ஆசைப்படாமல் இருத்தல் என்பது இதன் பொருள்.
அதிலே ஒரு குறள் இன்றைய உலகத்துக்கும் பொருந்தும். அடுத்தவன் மனைவியை விரும்புவதால் ஏற்படும் நான்கு விளைவுகளை வள்ளுவர் அந்தக் குறளிலே எடுத்துக் காட்டுவார்.
1. பகை – அந்தப் பெண்ணின் கணவனோ அல்லது உறவுகளோ கண்டுபிடித்தால் அது பெரும் பகையிலே கொண்டு சென்று நிறுத்தும்.
2. பாவம் – யாரும் கானாவிட்டால் கூட தன் மனதளவில் அது தருமம் நீதி இல்லாத பாவச்செயலாக அமைந்து பிற்காலத்தில் மிகுந்த மனவருத்தத்தைத் தரும்.
3. அச்சம் – இந்தச் சம்பவத்தினால் என்ன பிரச்சனை வருமோ என்ற பயம் எப்பொழுதும் இருந்து கொண்டு தினமும் துன்பப்படுத்தும்.
4. பழி – ஊர் உலகத்துக்குத் தெரிய வந்தால் அவப்பெயரைச் சாகும்வரை சுமக்கவேண்டி ஏற்படும்.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
( திருக்குறள் – பிறனில் விழையாமை – குறள் 146 )
இரா.சம்பந்தன்
December 2, 2018